என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் மன்றத்துக்கு விருது: கலெக்டர் வழங்கினார்
காரியாபட்டி:
நேரு யுவகேந்திராசார்பில் ஆண்டுதோறும், சிறப்பாக செயல்படும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இளைஞர் மன்றத்துக்கு விருது வழங்கப்படுகிறது. மாவட்ட சிறந்த இளைஞர் மன்றத்துக்கு விருது மற்றும் 25 ஆயிரம் ரூபாயும், மாநில விருதுக்கு ரூபாய் 1 லட்சமும், தேசிய விருதுக்கு 3 லட்சமும் வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்குநேரு யுவ கேந்திரா சார்பில் அறிவிப்பு வெளியானது. பல இளைஞர் மன்றங்கள் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்தன.
இதில் காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் அதிகசேவை செய்தமைக்காக மாவட்ட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்திற்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் 25 ஆயிரம் ரூபாய் காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கணக்காளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்