என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது?
Byமாலை மலர்22 March 2017 3:09 AM GMT (Updated: 22 March 2017 3:09 AM GMT)
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது? என்பது பற்றி சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக விவாதித்தனர்.
சென்னை:
தமிழக பட்ஜெட் குறித்த எம்.எல்.ஏ.க்களின் விவாதம் சட்டசபையில் நேற்று நடந்தது. தி.மு.க. தரப்பில் திட்டக் குடி எம்.எல்.ஏ. கணேசன் பேசினார். அப்போது அவையில் நடந்த விவாதம் வருமாறு:-
கணேசன்:- தமிழகத்தில் 140 ஆண்டு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
அமைச்சர் உதயகுமார்:- பொத்தாம் பொதுவாகக் கூறக் கூடாது. குடிமராமத்து, தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் அதிகரிப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிவாரணத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான்.
தி.மு.க. கொறடா சக்கரபாணி:- 5 ஏக்கர் நிலத்துக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்குத்தான் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பழனி பகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி, நெய்க்காரன்பட்டி ஆகிய பகுதிகள் நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு அதில் அந்த 2 ஊர்களையும் சேர்க்க முடியாது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கூறுகிறார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:- கலெக்டர் மற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நானும் சென்று அந்த இடங்களை பார்வையிட்டேன். வறட்சி நிவாரணத்துக்கு எந்த இடமும் விடப்படவில்லை.
அமைச்சர் உதயகுமார்:- பயிர்க் காப்பீட்டுக்காக மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.410 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை, காப்பீட்டில் இருந்து இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
5 ஏக்கர் நிலம் என்ற வரையறை மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டதாகும். முன் உதாரணம் இல்லாத அளவுக்கு முழுமையாக நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கணேசன்:- இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிதான்.
அமைச்சர் ஜெயக்குமார்:- எம்.ஜி.ஆர்.தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன்:- எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஒரு குதிரை சக்தி மின்மோட்டாருக்கு ரூ.25 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் வரும்போது உங்களால் கூறப்பட்ட வார்த்தைதான் இலவச மின்சாரம்.
அமைச்சர் ஜெயக்குமார்:- சட்டசபையில் ஏற்கனவே இந்த பிரச்சினை பற்றி பலமுறை விவாதிக்கப்பட்டு உள்ளது. நான் அரசு ஆவணங்களையும், அரசாணையையும் காட்டத்தயார். அதற்கு கணேசன் பொறுப்பேற்றால் சரி.
கணேசன்:- 1989-90-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
சக்கரபாணி:- மாமரம், தென்னை உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கும் நஷ்டஈடு தரப்படவேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் உள்பட மற்ற கடன்களையும் ரத்து செய்யவேண்டும்.
கணேசன்:- ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உணவு அமைச்சர் காமராஜ்:- சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான டெண்டர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் 3-ந் தேதி தகவல் வெளியிடப்பட்டது.
அதை எதிர்க்கட்சித் தலைவர் பார்த்துவிட்டு, 7-ந் தேதியில் ரேஷன் கடைகளில் சோதனை செய்துவிட்டு போராட்டம் பற்றி அறிவிக்கிறார். எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும்?
இவ்வாறு விவாதம் நடந்தது.
தமிழக பட்ஜெட் குறித்த எம்.எல்.ஏ.க்களின் விவாதம் சட்டசபையில் நேற்று நடந்தது. தி.மு.க. தரப்பில் திட்டக் குடி எம்.எல்.ஏ. கணேசன் பேசினார். அப்போது அவையில் நடந்த விவாதம் வருமாறு:-
கணேசன்:- தமிழகத்தில் 140 ஆண்டு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
அமைச்சர் உதயகுமார்:- பொத்தாம் பொதுவாகக் கூறக் கூடாது. குடிமராமத்து, தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் அதிகரிப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிவாரணத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான்.
தி.மு.க. கொறடா சக்கரபாணி:- 5 ஏக்கர் நிலத்துக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்குத்தான் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பழனி பகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி, நெய்க்காரன்பட்டி ஆகிய பகுதிகள் நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு அதில் அந்த 2 ஊர்களையும் சேர்க்க முடியாது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கூறுகிறார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:- கலெக்டர் மற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நானும் சென்று அந்த இடங்களை பார்வையிட்டேன். வறட்சி நிவாரணத்துக்கு எந்த இடமும் விடப்படவில்லை.
அமைச்சர் உதயகுமார்:- பயிர்க் காப்பீட்டுக்காக மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.410 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை, காப்பீட்டில் இருந்து இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
5 ஏக்கர் நிலம் என்ற வரையறை மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டதாகும். முன் உதாரணம் இல்லாத அளவுக்கு முழுமையாக நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கணேசன்:- இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிதான்.
அமைச்சர் ஜெயக்குமார்:- எம்.ஜி.ஆர்.தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன்:- எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஒரு குதிரை சக்தி மின்மோட்டாருக்கு ரூ.25 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் வரும்போது உங்களால் கூறப்பட்ட வார்த்தைதான் இலவச மின்சாரம்.
அமைச்சர் ஜெயக்குமார்:- சட்டசபையில் ஏற்கனவே இந்த பிரச்சினை பற்றி பலமுறை விவாதிக்கப்பட்டு உள்ளது. நான் அரசு ஆவணங்களையும், அரசாணையையும் காட்டத்தயார். அதற்கு கணேசன் பொறுப்பேற்றால் சரி.
கணேசன்:- 1989-90-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
சக்கரபாணி:- மாமரம், தென்னை உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கும் நஷ்டஈடு தரப்படவேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் உள்பட மற்ற கடன்களையும் ரத்து செய்யவேண்டும்.
கணேசன்:- ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உணவு அமைச்சர் காமராஜ்:- சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான டெண்டர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் 3-ந் தேதி தகவல் வெளியிடப்பட்டது.
அதை எதிர்க்கட்சித் தலைவர் பார்த்துவிட்டு, 7-ந் தேதியில் ரேஷன் கடைகளில் சோதனை செய்துவிட்டு போராட்டம் பற்றி அறிவிக்கிறார். எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும்?
இவ்வாறு விவாதம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X