என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புன்னம்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பெரியரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (33), இவர் வேலாயுதம்பாளையத்திலிருந்து புன்னம்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தனர்.
அதியமான்கோட்டை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த தண்ணீர் டேங்க் லாரி அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் முருகேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இவரை ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக முருகேசனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செட்ரிக் மேன்யுவல் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்