என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெடுவாசல் போராட்டக் குழுவினர் மார்ச் 1-ம் தேதி முதல்வருடன் சந்திப்பு
Byமாலை மலர்26 Feb 2017 2:12 PM GMT (Updated: 26 Feb 2017 2:12 PM GMT)
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் குழுவினர் வரும் மார்ச் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச அனுமதி கோரியிருந்தனர். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் இன்று டெல்லி புறப்பட்டுவிட்டதால், வரும் மார்ச் 1-ம் தேதி போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முதல்வரை போராட்டக் குழுவினர் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச அனுமதி கோரியிருந்தனர். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் இன்று டெல்லி புறப்பட்டுவிட்டதால், வரும் மார்ச் 1-ம் தேதி போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முதல்வரை போராட்டக் குழுவினர் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X