என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லித்தோப்பு தொகுதி மக்களிடம் குறைகளை கேட்ட நாராயணசாமி
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தேர்தலின்போது பல வாக்குறுதிகளையும் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் மக்களை நேரடியாக சந்தித்து இன்று குறைகேட்கும் நிகழ்ச்சியை தொடங்கினார்.
முதல் கட்டமாக நெல்லித்தோப்பு தொகுதி வெண்ணிலாநகர் பகுதியில் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்தார். அப்போது மக்களிடம் இலவச அரிசி கிடைத்ததா? முதியோர் பென்ஷன் கிடைத்ததா? என விசாரித்தார்.
அப்பகுதி மக்கள் நாராயணசாமியிடம், பல ஆண்டாக இப்பகுதியில் மனைப்பட்டா வழங்க வில்லை. பட்டா பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டனர். மேலும் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் அதை சீரமைத்து தர வேண்டும். சமுதாய கூடத்தை புதுப்பித்து தர வேண்டும். அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த நாராயணசாமி, அவற்றை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அரசின் டெல்லி பிரதிநிதி ஜான் குமார், தொகுதி தி.மு.க. செயலாளர் நடராஜன், எஸ்.ஆர்.எஸ். நற்பணி இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், கலெக்டர் சத்யேந்திரசிங், அரசு செயலர் ஜவகர், நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்