என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு
Byமாலை மலர்24 Feb 2017 10:20 AM GMT (Updated: 24 Feb 2017 10:20 AM GMT)
நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்தது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றியவர் எம்.ஜெயசந்திரன். இவர், இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு இன்று காலையில், வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் மணிக்குமார், நாகமுத்து, சசிதரன், ராஜீவ்சக்தேர் உட்பட அனைத்து நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாநில தலைமை குற்றவியல் வக்கீல்கள், அரசு வக்கீல்கள், பிளீடர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், இந்த வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனிப்பட்ட வேலைக்கு வெளியில் சென்று இருந்ததால், ஐகோர்ட்டுக்கு கால தாமதமாக வந்தார்.
இந்த விழாவில், நீதிபதி எம்.ஜெயசந்திரனை வாழ்த்தி, அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி வாழ்த்தி பேசினார். இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதி எம்.ஜெயசந்திரன் பேசினார். நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்தது. காலிப்பணியிடங்கள், 19 ஆக உயர்ந்தது.
சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றியவர் எம்.ஜெயசந்திரன். இவர், இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு இன்று காலையில், வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் மணிக்குமார், நாகமுத்து, சசிதரன், ராஜீவ்சக்தேர் உட்பட அனைத்து நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாநில தலைமை குற்றவியல் வக்கீல்கள், அரசு வக்கீல்கள், பிளீடர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், இந்த வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனிப்பட்ட வேலைக்கு வெளியில் சென்று இருந்ததால், ஐகோர்ட்டுக்கு கால தாமதமாக வந்தார்.
இந்த விழாவில், நீதிபதி எம்.ஜெயசந்திரனை வாழ்த்தி, அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி வாழ்த்தி பேசினார். இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதி எம்.ஜெயசந்திரன் பேசினார். நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்தது. காலிப்பணியிடங்கள், 19 ஆக உயர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X