என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே கோவில் திருவிழாவில் தகராறு: 3 பேர் படுகாயம்
Byமாலை மலர்17 Feb 2017 10:54 AM GMT (Updated: 17 Feb 2017 10:55 AM GMT)
சேலம் அருகே கோவில் திருவிழாவில் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது மாங்குப்பை பகுதி. இங்கு மாரியம்மன்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. கடந்த ஒருவாரமாக விழா நடந்து வருவதால் சாமிக்கு தினமும் சிறப்பு பூஜை நடந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 11மணிஅளவில் கோவில் அருகே சிலர் மது குடித்து தகராறு செய்தனர். அப்போது இரண்டு தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கைக்கலப்பில் முடிந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே இவர்களை ஊர் பொதுமக்கள் தூக்கி சென்று சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X