என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மானாமதுரையில் இருந்து தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விடக்கோரிக்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் முன்னாள் தாசில்தார் அங்குச்சாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராசு வரவேற்றார். நிர்வாகிகள் மாசானம், பாண்டியன், காமாட்சி ஆகியோர் பேசினர். பாலுச்சாமி நன்றி கூறினார்.
இதில் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் மீனாட்சிசுந்தரம் தீர்மானங்களை வாசித்தார்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
மானாமதுரை மேல் கரையில் இருந்து வைகை ஆற்றின் குறுக்கே கன்னார் தெருவிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்துதர வேண்டும். மானமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி வழியாக தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்