என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் ஆற்றுப்படுகையில் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் பிணம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்10 Jan 2017 10:11 AM GMT (Updated: 10 Jan 2017 10:11 AM GMT)
ராணிப்பேட்டையில் ஆற்றுப்படுகையில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலாஜா:
ராணிப்பேட்டை பழைய மேம்பாலம் அருகே ஆற்றுப்படுகை உள்ளது. கொஞ்ச அளவில் படுகையில் தண்ணீர் உள்ளது. நேற்று மாலை அந்த பகுதிக்கு சிலர் சென்றனர்.
அவர்கள் ஆற்றுப்படுகை ஓரமாக சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கால் தண்ணீரில் இருந்தது. உடல் பகுதி மணலில் கிடந்தது.
அந்த நபர் நிர்வாண நிலையில் இருந்தார். அவரது ஆடைகளான டீ-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் ஆகியவை ஓரமாக கழற்றி வைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடார்பாக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆற்று தண்ணீரில் குளிக்க வந்த அவர் நோய் காரணமாக இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை பழைய மேம்பாலம் அருகே ஆற்றுப்படுகை உள்ளது. கொஞ்ச அளவில் படுகையில் தண்ணீர் உள்ளது. நேற்று மாலை அந்த பகுதிக்கு சிலர் சென்றனர்.
அவர்கள் ஆற்றுப்படுகை ஓரமாக சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கால் தண்ணீரில் இருந்தது. உடல் பகுதி மணலில் கிடந்தது.
அந்த நபர் நிர்வாண நிலையில் இருந்தார். அவரது ஆடைகளான டீ-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் ஆகியவை ஓரமாக கழற்றி வைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடார்பாக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆற்று தண்ணீரில் குளிக்க வந்த அவர் நோய் காரணமாக இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X