என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது
Byமாலை மலர்7 Dec 2016 12:17 AM GMT (Updated: 7 Dec 2016 12:17 AM GMT)
பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் இன்று (புதன் கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது.
சென்னை:
பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் இன்று (புதன் கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது.
பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2003-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-1, 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 3-வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் திட்டமிட்டப்படி துருவப்பகுதியின் குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில், பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் இன்று (புதன்கிழமை) காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கி இன்று காலை 10.24 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக் கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் இன்று (புதன் கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது.
பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2003-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-1, 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 3-வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் திட்டமிட்டப்படி துருவப்பகுதியின் குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில், பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் இன்று (புதன்கிழமை) காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கி இன்று காலை 10.24 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக் கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X