என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன்-சீமான் கைது
Byமாலை மலர்26 Oct 2016 8:33 AM GMT (Updated: 26 Oct 2016 8:33 AM GMT)
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன், சீமான் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
இலங்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களான நடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு பல்வேறு அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் தனித்தனியாக போராட்டங்கள் நடந்தன.
ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொது செயலாளர் சத்ரியன் வேணுகோபால், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து திருமாவளவன் கூறும்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்து வரும் துரோகங்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தடா சந்திரசேகரன், ராவணன், அன்பு தென்னரசன், சிவகுமார், பாக்யராஜன், செந்தில் குமார், ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீமான் கூறும்போது, இலங்கையில் கூலி உயர்வு கேட்டு போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாணவர்கள் இருவரும் வேகமாக சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்றார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இலங்கை துணை தூதரை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது.
இலங்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களான நடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு பல்வேறு அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் தனித்தனியாக போராட்டங்கள் நடந்தன.
ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொது செயலாளர் சத்ரியன் வேணுகோபால், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து திருமாவளவன் கூறும்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்து வரும் துரோகங்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தடா சந்திரசேகரன், ராவணன், அன்பு தென்னரசன், சிவகுமார், பாக்யராஜன், செந்தில் குமார், ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீமான் கூறும்போது, இலங்கையில் கூலி உயர்வு கேட்டு போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாணவர்கள் இருவரும் வேகமாக சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்றார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இலங்கை துணை தூதரை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X