என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேட்புமனு படிவத்தில் வேட்பாளரின் புகைப்படம் ஒட்ட வேண்டும்: தேர்தல் ஆணையம்
Byமாலை மலர்25 Oct 2016 1:42 PM GMT (Updated: 25 Oct 2016 1:42 PM GMT)
தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுவில் வேட்பாளரின் புகைப்படம் ஒட்டும் வகையில் படிவத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 17-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதலே 3 தொகுதிகளிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், மனு தாக்கலுக்கு ஏற்கனவே உள்ள விதிமுறைகளுடன், வேட்பாளரின் புகைப்படம் மற்றும் குடியுரிமை உறுதிமொழி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
இந்தியத் தேர்தல் ஆணையமானது, தற்போது வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான படிவம் 2ஏ (பாராளுமன்றத் தேர்தலுக்குரியது) மற்றும் படிவம் 2பி (சட்டப்பேரவைத் தேர்தலுக்குரியது) ஆகியவற்றில் வேட்பாளரின் புகைப்படத்தை ஒட்டுவதற்கும், தனது குடியுரிமை குறித்த உறுதிமொழியான அதாவது தான் ஒரு இந்தியக் குடிமகன் எனவும் வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை எனவும் உறுதிமொழியை அளிப்பதற்கான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
மேற்படி திருத்தம் செய்யப்பட்ட படிவங்கள் அச்சிடப்பட்டு உரிய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட புதிய படிவத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுவைப் பெற வேண்டும் எனத் தற்போது தேர்தல் நடக்கவுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 17-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதலே 3 தொகுதிகளிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், மனு தாக்கலுக்கு ஏற்கனவே உள்ள விதிமுறைகளுடன், வேட்பாளரின் புகைப்படம் மற்றும் குடியுரிமை உறுதிமொழி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
இந்தியத் தேர்தல் ஆணையமானது, தற்போது வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான படிவம் 2ஏ (பாராளுமன்றத் தேர்தலுக்குரியது) மற்றும் படிவம் 2பி (சட்டப்பேரவைத் தேர்தலுக்குரியது) ஆகியவற்றில் வேட்பாளரின் புகைப்படத்தை ஒட்டுவதற்கும், தனது குடியுரிமை குறித்த உறுதிமொழியான அதாவது தான் ஒரு இந்தியக் குடிமகன் எனவும் வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை எனவும் உறுதிமொழியை அளிப்பதற்கான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
மேற்படி திருத்தம் செய்யப்பட்ட படிவங்கள் அச்சிடப்பட்டு உரிய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட புதிய படிவத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுவைப் பெற வேண்டும் எனத் தற்போது தேர்தல் நடக்கவுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X