என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகுடஞ்சாவடி அருகே பிளஸ்-1 மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்21 Oct 2016 12:26 PM GMT (Updated: 21 Oct 2016 12:26 PM GMT)
மகுடஞ்சாவடி அருகே பிளஸ்-1 மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ளது நல்லனம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் போதும் நல்லனம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவர் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்து தெரிவித்து வந்தார்.
ஆனாலும் பாலமுருகன் விடாமல் பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு மாணவியை டார்ச்சர் செய்து வந்தார். இதனாம் மனம் உடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பாலமுருகன் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டதுடன் அவரை கண்டித்தனர். அப்போது பாலமுருகன் பதில் ஏதும் செல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்
பின்னர் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதற்கிடையே பாலமுருகன் மாணவியின் உறவினர்கள் சிலர் தன்னை தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் பாலமுருகனை கண்காணித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ளது நல்லனம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் போதும் நல்லனம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவர் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்து தெரிவித்து வந்தார்.
ஆனாலும் பாலமுருகன் விடாமல் பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு மாணவியை டார்ச்சர் செய்து வந்தார். இதனாம் மனம் உடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பாலமுருகன் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டதுடன் அவரை கண்டித்தனர். அப்போது பாலமுருகன் பதில் ஏதும் செல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்
பின்னர் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதற்கிடையே பாலமுருகன் மாணவியின் உறவினர்கள் சிலர் தன்னை தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் பாலமுருகனை கண்காணித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X