search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேட்டில் வேன் டிரைவர் கொலை
    X

    கோயம்பேட்டில் வேன் டிரைவர் கொலை

    கோயம்பேட்டில் வேன் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு:

    சென்னை, பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் தேவதாஸ் (வயது 40). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும்.

    இவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள டைல்ஸ் விற்கும் கடையின் மேல் பகுதியில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை கடையின் மேல் பகுதியில் தேவதாஸ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை.

    தேவதாசுடன் இரவில் தங்கி இருந்தவர்கள் யார்? மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது முன்விரோதத்தில் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக டைல்ஸ் கடை ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×