என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழப்பங்களை தவிர்த்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்: தி.மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி பேச்சு
Byமாலை மலர்17 Sep 2016 3:00 PM GMT (Updated: 17 Sep 2016 3:00 PM GMT)
தி.மு.க. தொண்டர்கள் குழப்பங்களை தவிர்த்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியின் தலைவர் கருணாநிதி உரையாற்றினார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:-
நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வருகிறேன். ஆற்ற வேண்டிய தொண்டை ஆற்றுவேன். தொடர்ந்து இயக்கத்தை கட்டிக் காப்பேன். பல இழப்புகளையும் தாண்டி இந்த இயக்கத்தை தொண்டர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் நாம் குரல் எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்து கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபடவேண்டும்.
பெரியாரின் எண்ணங்கள், அண்ணாவின் கொள்கைகள் என்றைக்கும் இந்த இயக்கத்தை வழிநடத்தும். நாம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்த வெற்றியை நோக்கி பயணிக்க இருக்கிறோம். நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற குழப்பங்களை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.
உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்ற அளவுக்கு அனைத்து பணிகளையும் முடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:-
நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வருகிறேன். ஆற்ற வேண்டிய தொண்டை ஆற்றுவேன். தொடர்ந்து இயக்கத்தை கட்டிக் காப்பேன். பல இழப்புகளையும் தாண்டி இந்த இயக்கத்தை தொண்டர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் நாம் குரல் எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்து கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபடவேண்டும்.
பெரியாரின் எண்ணங்கள், அண்ணாவின் கொள்கைகள் என்றைக்கும் இந்த இயக்கத்தை வழிநடத்தும். நாம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்த வெற்றியை நோக்கி பயணிக்க இருக்கிறோம். நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற குழப்பங்களை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.
உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்ற அளவுக்கு அனைத்து பணிகளையும் முடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X