என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் கைதான மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், ஷைனா மீது மேலும் ஒரு வழக்கு
Byமாலை மலர்26 May 2016 10:07 AM GMT (Updated: 26 May 2016 10:07 AM GMT)
கோவையில் கைதான மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், ஷைனா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் தலைவர் ரூபேஷ், இவரது மனைவி ஷைனா உள்பட 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானோரிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி அதன்மூலம் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ரூபேஷ், ஷைனா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை கருப்புகவுண்டர் தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரது மனைவி சாந்தி(40) வெரைட்டி ஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ரூபேஷ், ஷைனா ஆகியோர் எனது ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின்பேரில் ரூபேஷ், ஷைனா மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் தலைவர் ரூபேஷ், இவரது மனைவி ஷைனா உள்பட 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானோரிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி அதன்மூலம் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ரூபேஷ், ஷைனா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை கருப்புகவுண்டர் தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரது மனைவி சாந்தி(40) வெரைட்டி ஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ரூபேஷ், ஷைனா ஆகியோர் எனது ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின்பேரில் ரூபேஷ், ஷைனா மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X