என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான மொகல் வெஜ் பிரியாணி
Byமாலை மலர்28 Oct 2017 9:42 AM GMT (Updated: 28 Oct 2017 9:42 AM GMT)
பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. இன்று மொகல் வெஜ் பிரியாணியை சுவையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
பீன்ஸ் - 10
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையானது
தாளிக்க :
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 1
செய்முறை :
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு மூன்றையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்லவேண்டும்.
பாசுமதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அரிசியை கொதிக்கும் தண்ணீரில் (இரண்டு கப்) போட்டு அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். அரிசி முக்கால் பதத்துக்கு வெந்துவிடும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.(முடிந்தால் இஞ்சியை தனியாகவும், பூண்டு தனியாகவும் அரைத்து சேர்க்கலாம்)
அடுத்து தக்காளி வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பும், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.
கலவை கெட்டியாக வந்ததும் வடித்த சாதத்தை போட்டு சிறிது கிளறி அடுப்பை அணைத்து விட்டு தயிர், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
தம் கட்டுதல் :
பிரியாணியை ஒரு அகண்டை பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவேண்டும்.
பாத்திரத்துக்கும் தட்டுக்கும் இடைவெளி இல்லாமல் ஈரத்துணியால் மூடி துணியை முறுக்கிவிட்டு தட்டு மேல் ஏதாவது வெயிட்டான பொருளை வைக்கவும்.
15 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மொகல் வெஜ் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - 1 கப்
பீன்ஸ் - 10
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையானது
தாளிக்க :
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 1
செய்முறை :
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு மூன்றையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்லவேண்டும்.
பாசுமதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அரிசியை கொதிக்கும் தண்ணீரில் (இரண்டு கப்) போட்டு அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். அரிசி முக்கால் பதத்துக்கு வெந்துவிடும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.(முடிந்தால் இஞ்சியை தனியாகவும், பூண்டு தனியாகவும் அரைத்து சேர்க்கலாம்)
அடுத்து தக்காளி வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பும், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.
கலவை கெட்டியாக வந்ததும் வடித்த சாதத்தை போட்டு சிறிது கிளறி அடுப்பை அணைத்து விட்டு தயிர், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
தம் கட்டுதல் :
பிரியாணியை ஒரு அகண்டை பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவேண்டும்.
பாத்திரத்துக்கும் தட்டுக்கும் இடைவெளி இல்லாமல் ஈரத்துணியால் மூடி துணியை முறுக்கிவிட்டு தட்டு மேல் ஏதாவது வெயிட்டான பொருளை வைக்கவும்.
15 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மொகல் வெஜ் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X