search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான வடை மோர் குழம்பு
    X

    சூப்பரான வடை மோர் குழம்பு

    வடை மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம். சூப்பராகவும் இருக்கும். இன்று வடை மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மெதுவடை அல்லது பருப்பு வடை - 10
    தயிர் - 2 கப்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    ஊறவைத்து நைசாக அரைக்க :

    அரிசி - 1 ஸ்பூன்
    துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    சீரகம் - 1ஸ்பூன்

    கொரகொரப்பாக அரைக்க :

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - சிறிது துண்டு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - கால் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2



    செய்முறை :


    * அரிசி, துவரம் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

    * கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான வடை மோர் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×