என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குஜராத்தி ஸ்பெஷல் டோக்ளா
Byமாலை மலர்13 Feb 2017 3:42 AM GMT (Updated: 13 Feb 2017 3:42 AM GMT)
குஜராத்தியர்களின் விருப்ப உணவான இது சத்தான உணவும் கூட. இந்த டோக்ளாவை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 டம்ளர்
தயிர் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
ஈனோ(ப்ரூட் சால்ட்) - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
கறிவேப்பிலை - காம்பு நீக்கி பொடியாக நறுக்கியது
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 இலைகள்
செய்முறை :
* ரவையை லேசாக வறுக்கவும் (சிவக்கத் தேவையில்லை, பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்தால் போதும்)
* பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ரவை, பச்சைமிளகாய், தயிர், சீரகம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, ஈனோ சால்ட் அனைத்தையும் ஒன்றாக இட்லி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
* வாயகன்ற பாத்திரத்தில் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
* வட்ட வடிவத் தட்டோ, பாத்திரமோ அதில் எண்ணெயைத் தடவி கரைத்த மாவைக் கொட்டி அடுப்பில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும்.
* ரவை வெந்து விட்டதா என்பதைப் பார்க்க ஒரு குச்சியை உள்ளே விட்டுக் கண்டறியலாம்(குச்சியில் மாவு ஒட்டி இருந்தால் கூட 2 நிமிடங்கள் வேக வைக்கலாம்)
* வெந்ததை வெளியில் எடுத்து ஒரு அகலமான தட்டில் திருப்பிப் போடவும். வட்ட வடிவத்தில் இருக்கும் டோக்ளாவைச் சிறு சிறு சதுரங்களாக்கி தாளித்த கடுகினைத் தெளிக்கவும். அல்லது துண்டுகளாக்கிய டோக்ளாவை கடுகு தாளிசத்தில் லேசாகப் பிரட்டி எடுக்க சுவையான டோக்ளா தயார்.
* இது குஜராத்தியர்களின் சிற்றுண்டி வகை.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - 1 டம்ளர்
தயிர் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
ஈனோ(ப்ரூட் சால்ட்) - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
கறிவேப்பிலை - காம்பு நீக்கி பொடியாக நறுக்கியது
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 இலைகள்
செய்முறை :
* ரவையை லேசாக வறுக்கவும் (சிவக்கத் தேவையில்லை, பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்தால் போதும்)
* பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ரவை, பச்சைமிளகாய், தயிர், சீரகம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, ஈனோ சால்ட் அனைத்தையும் ஒன்றாக இட்லி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
* வாயகன்ற பாத்திரத்தில் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
* வட்ட வடிவத் தட்டோ, பாத்திரமோ அதில் எண்ணெயைத் தடவி கரைத்த மாவைக் கொட்டி அடுப்பில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும்.
* ரவை வெந்து விட்டதா என்பதைப் பார்க்க ஒரு குச்சியை உள்ளே விட்டுக் கண்டறியலாம்(குச்சியில் மாவு ஒட்டி இருந்தால் கூட 2 நிமிடங்கள் வேக வைக்கலாம்)
* வெந்ததை வெளியில் எடுத்து ஒரு அகலமான தட்டில் திருப்பிப் போடவும். வட்ட வடிவத்தில் இருக்கும் டோக்ளாவைச் சிறு சிறு சதுரங்களாக்கி தாளித்த கடுகினைத் தெளிக்கவும். அல்லது துண்டுகளாக்கிய டோக்ளாவை கடுகு தாளிசத்தில் லேசாகப் பிரட்டி எடுக்க சுவையான டோக்ளா தயார்.
* இது குஜராத்தியர்களின் சிற்றுண்டி வகை.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X