என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி
Byமாலை மலர்1 Feb 2017 7:40 AM GMT (Updated: 1 Feb 2017 7:40 AM GMT)
பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று செய்து சுவைத்திருப்போம். ஆனால் இன்று பன்னீர் பஹடி செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 500 கிராம்
குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பற்கள்
தயிர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* பன்னீர், வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு, மல்லித் தூள், சீரகப் பொடி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, அதில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மீதமுள்ள பாதியில் சோள மாவு, தந்தூரி மசாலா, சாட் மசாலா, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* கலந்த மசாலாவில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து பிரட்டி, க்ரில் கம்பியில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம், என்று வரிசைப்படுத்தி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து க்ரில் கம்பியை நீட்டி பன்னீரை பொன்னிறமாக க்ரில் செய்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் நிறம் மாறும் வரை வதக்கி, பின் அதில் 2 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சாட் மசாலா மற்றும் மல்லித் தூள சேர்த்து 5 நிமிடம் இறக்கவும்.
* இந்த மசாலாவை பன்னீரின் மேல் ஊற்றினால், பன்னீர் பஹடி ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் - 500 கிராம்
குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பற்கள்
தயிர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* பன்னீர், வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு, மல்லித் தூள், சீரகப் பொடி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, அதில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மீதமுள்ள பாதியில் சோள மாவு, தந்தூரி மசாலா, சாட் மசாலா, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* கலந்த மசாலாவில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து பிரட்டி, க்ரில் கம்பியில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம், என்று வரிசைப்படுத்தி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து க்ரில் கம்பியை நீட்டி பன்னீரை பொன்னிறமாக க்ரில் செய்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் நிறம் மாறும் வரை வதக்கி, பின் அதில் 2 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சாட் மசாலா மற்றும் மல்லித் தூள சேர்த்து 5 நிமிடம் இறக்கவும்.
* இந்த மசாலாவை பன்னீரின் மேல் ஊற்றினால், பன்னீர் பஹடி ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X