என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி
Byமாலை மலர்13 Oct 2016 9:01 AM GMT (Updated: 13 Oct 2016 9:01 AM GMT)
குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 3 லிட்டர்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 4 கப்
குங்குமப் பூ - சிறிது
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்
செய்முறை :
* பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
* 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும்.
* அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
* மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
* தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசையவும்.
* பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும்.
* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
* கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில்வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.
* இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும்.
* ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
* தித்திப்பான ரசமலாய் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - 3 லிட்டர்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 4 கப்
குங்குமப் பூ - சிறிது
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்
செய்முறை :
* பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
* 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும்.
* அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
* மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
* தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசையவும்.
* பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும்.
* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
* கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில்வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.
* இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும்.
* ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
* தித்திப்பான ரசமலாய் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X