search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சம்பா ரவை காய்கறி உப்புமா
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சம்பா ரவை காய்கறி உப்புமா

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சம்பா ரவையை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று சம்பா ரவை காய்கறி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    கேரட் - 1
    சம்பா ரவை - 1/2 கப்



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும்.
    பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

    சம்பா ரவை காய்கறி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×