search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான மணத்தக்காளி கீரை ரைத்தா
    X

    சப்பாத்திக்கு அருமையான மணத்தக்காளி கீரை ரைத்தா

    சப்பாத்தி, புலாவ், தக்காளி சாதத்துடன் சாப்பிட மணத்தக்காளி கீரை ரைத்தா சூப்பராக இருக்கும். இன்று இந்த ரைத்தாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தயிர் - ஒரு கப்,
    மணத்தக்காளி கீரை - அரை கப்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    தேங்காயுடன் சீரகம், ப.மிளகாய், கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த தயிரில் அரைத்த வைத்த கீரை விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து ரைத்தாவுடன் சேர்த்து கலக்கவும்.

    சூப்பரான மணத்தக்காளி கீரை ரைத்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×