search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்
    X

    புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

    பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    தக்காளி 2,
    கருப்பு உப்பு - கொஞ்சம்,
    சீரகத்தூள் - அரை ஸ்பூன்
    புதினா இலைகள் - 10.



    செய்முறை :

    * கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

    * அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

    * உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×