என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஆரோக்கியமான சாமை அரிசி புலாவ்
Byமாலை மலர்25 March 2017 3:30 AM GMT (Updated: 25 March 2017 3:30 AM GMT)
சாமை அரிசி புலாவ் உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் மிகுந்த சுவையுடையது. இன்று சாமை அரிசியை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி - 1/4 கப்
மிளகுதூள் - 2 டீஸ்பூன்
கேரட், பீன்ஸ் - 1 கப்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் 2
பட்டை, கிராம்பு -2
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
செய்முறை :
* சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* பிறகு, நறுக்கிய கேரட், பீன்ஸ் போட்டு வதக்கிய பின், சாமை அரிசியை சேர்த்து தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி கடாயை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* சாமை அரிசி வெந்தபின் அதன் மேலாக புதினா, கொத்தமல்லி இலையைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்த பின் இறக்கி பரிமாறலாம்.
* ருசியான சாமை அரிசி புலாவ் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாமை அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி - 1/4 கப்
மிளகுதூள் - 2 டீஸ்பூன்
கேரட், பீன்ஸ் - 1 கப்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் 2
பட்டை, கிராம்பு -2
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
செய்முறை :
* சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* பிறகு, நறுக்கிய கேரட், பீன்ஸ் போட்டு வதக்கிய பின், சாமை அரிசியை சேர்த்து தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி கடாயை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* சாமை அரிசி வெந்தபின் அதன் மேலாக புதினா, கொத்தமல்லி இலையைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்த பின் இறக்கி பரிமாறலாம்.
* ருசியான சாமை அரிசி புலாவ் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X