search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான பார்லி வெண் பொங்கல்
    X

    சத்தான பார்லி வெண் பொங்கல்

    டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் பார்லியை சேர்த்து கொள்வது நல்லது. பார்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உடைத்த பார்லி - 1 கப்,
    பாசிப் பருப்பு - கால் கப்,
    ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - சிறிது,
    நெய் - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - 1 சிட்டிகை.

    செய்முறை :

    * இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பார்லியையும், பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் போட்டு வேக வைக்கவும்.

    * வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.

    * சுவையான சத்தான பார்லி வெண் பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×