என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி
Byமாலை மலர்19 Nov 2016 2:21 AM GMT (Updated: 19 Nov 2016 2:21 AM GMT)
சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தயிர் - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை :
* வறுத்த வேர்க்கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற விடவும்.
* ஆறியபின் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்த பின் அதனுடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கடைந்து விட்டு அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.
* இந்த பச்சடி கலந்த சாதம், சப்பாத்தி மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை :
* வறுத்த வேர்க்கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற விடவும்.
* ஆறியபின் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்த பின் அதனுடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கடைந்து விட்டு அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.
* இந்த பச்சடி கலந்த சாதம், சப்பாத்தி மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X