search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்
    X

    சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

    தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பாசிப்பருப்புக்கீரை கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருப்புக் கீரை - 1 கட்டு
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 10
    பூண்டு - 4 பல்
    தக்காளி - 1 (பெரியது)
    மிளகாய் வற்றல் - 4
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    * கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.

    * குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

    * அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

    * மிளகாய் தூள் வாசம் மாறியதும் வேக வைத்த பருப்பையும், கீரை, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

    * சுவையான பாசிப்பருப்புக்கீரை கடையல் தயார்.

    * சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×