என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான சத்தான தினை பெசரட்
Byமாலை மலர்30 Sep 2016 6:53 AM GMT (Updated: 30 Sep 2016 6:53 AM GMT)
தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. தினை, பாசிப்பருப்பை வைத்து பெசரட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - ஒரு கப்,
தினை அரிசி - முக்கால் கப்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* இஞ்சி, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்
* தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பா அரைக்கவும்.
* அரைத்த மாவில் தேவையாயன அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான தினை பெசரட் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X