search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூலத்தை குணமாக்கும் துத்திக்கீரை
    X

    மூலத்தை குணமாக்கும் துத்திக்கீரை

    தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
    கொடி துத்தி, ஒட்ட துத்தி, எலிச் செவிதுத்தி, கருந்துத்தி, பசுந்துத்தி,சிறு துத்தி, பெருந்துத்தி, நிலத்துத்தி, கண்டு துத்தி, ஐஇதழ் துத்தி பனியாரத்துத்தி, காட்டு துத்தி, பொட்டக துத்தி, என பல பெயர்கள் இந்த கீரைக்கு உண்டு. வேர், பூ, இலை மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட செடியாகும்.

    மற்ற கீரைகளை போன்று இதை சமையலுக்கு யாரும் பயன்படுத்து வதில்லை, சமைத்து அளவாக சாப்பிடலாம் மலத்தை இளக்கி வெளியேற்றவும், உடல் புண்ணை குணமாக்கவும் உடலை தேற்றவும் இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கிறது. துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டி கொண்டால் ரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தும் சரியாகி நலம் உண்டாகும்.

    துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.

    அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும். துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்.?துத்தி விதைகளை பொடிசெய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து 200 முதல் 400 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள், உடல்சூடு, தொழு நோய், கருமேக, வென்மேக நோய், மேக அனல் முதலியவை கட்டுப்படுகிறது.

    குடிநீரில் விதையின் பொடி சிறிது கலந்து குடித்தால் பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோய் குணமாகும். துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும். குடல்புண், தொண்டை கம்மல், சொரிசிரங்குகளையும் இதன் இலை கசாயம் குணமாக்கும்.

    தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

    Next Story
    ×