search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனப்பிரச்சனைகளை குறைக்கும் அஞ்சலி முத்திரை
    X

    மனப்பிரச்சனைகளை குறைக்கும் அஞ்சலி முத்திரை

    பெரியவர்களை வணங்கவும் வரவேற்கவும் நன்றி செலுத்துவும் விடைபெறவும் இந்த அஞ்சலி முத்திரையை நாம் பயன்படுத்துகிறோம். இந்த முத்தியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    அஞ்சலி என்பது கைகளைக் கூப்பி, வணங்குவதையும் நன்றி தெரிவித்தலையும் குறிக்கும். பெரியவர்களை வணங்கவும் வரவேற்கவும் நன்றி செலுத்துவும் விடைபெறவும் இந்த அஞ்சலி முத்திரையை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், இதுவும் முத்திரைகளுள் ஒன்றுதான். நல்ல உணர்வுகள், சமநிலையான மனநிலை ஆகியவற்றைத் தருகிறது இந்த அஞ்சலி முத்திரை.

    செய்முறை :

    தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும். 10 - 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.

    பலன்கள் :

    * மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும்.

    * விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.

    * இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது.

    * மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

    * ஒரு செயலைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இந்த முத்திரையைச் செய்வது நல்லது.
    Next Story
    ×