என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
எந்த வயதில் குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம்?
Byமாலை மலர்12 April 2018 8:41 AM GMT (Updated: 12 April 2018 8:41 AM GMT)
குழந்தைகளுக்கு எந்த வயதில் பாதாம் பால் கொடுக்கலாம், பாதாம் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துக்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33% கால்சியம் கொண்டுள்ளது.
பாதாமை அப்படியே சாப்பிடுவதால் அதன் முழுமையான பலன்களை பெறலாம். ஆனால் பாதாம் பாலாக செய்து குடிக்கும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல், நீர்த்துவிடுகிறது.
சிலர் ஒரு வயதிற்கு முதலேயே பாதாம் பாலை குழந்தைகளுக்கு தருவார்கள். அது தவறு. ஏனெனில் சில குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி உண்டாகலாம்.
நட்ஸ் அலர்ஜி உண்டானால் வாந்தி, வயிற்று வலி, மூச்சு திணறல், வயிறு இழுத்து பிடிப்பதுபோலுணர்வு, இருமல், சரும தடிப்பு ஆகியவை உண்டாகலாம். இதனால் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்துவிட்டு நீங்கள் கொடுக்கலாம்.
பாதாம் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதோடு பாதாமிலுள்ள சில பண்புகள் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆகவே குழந்தைகளுக்கு கொழுப்பை வரவிடாமால் தடுக்கும். ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமாகும்.
பொதுவாக 2 வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நட்ஸ் ஆகும். அதிலுள்ள நார்சத்து இதயத்தை வலுவாக்கும். எலும்புகள் வலுவாகும்.
நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நீண்ட ஆயுளை தரும். பாதாமை பாலாக விட அப்படியே கொடுப்பது சிறந்தது. இரவில் ஊற வைத்து மறு நாள் தினமும் இரு பாதாமை சாப்பிட சொல்லுங்கள். புத்திக் கூர்மை, ஆயுள் ஆரோக்கியம் மேம்படும்.
பாதாமை அப்படியே சாப்பிடுவதால் அதன் முழுமையான பலன்களை பெறலாம். ஆனால் பாதாம் பாலாக செய்து குடிக்கும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல், நீர்த்துவிடுகிறது.
சிலர் ஒரு வயதிற்கு முதலேயே பாதாம் பாலை குழந்தைகளுக்கு தருவார்கள். அது தவறு. ஏனெனில் சில குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி உண்டாகலாம்.
நட்ஸ் அலர்ஜி உண்டானால் வாந்தி, வயிற்று வலி, மூச்சு திணறல், வயிறு இழுத்து பிடிப்பதுபோலுணர்வு, இருமல், சரும தடிப்பு ஆகியவை உண்டாகலாம். இதனால் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்துவிட்டு நீங்கள் கொடுக்கலாம்.
பாதாம் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதோடு பாதாமிலுள்ள சில பண்புகள் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆகவே குழந்தைகளுக்கு கொழுப்பை வரவிடாமால் தடுக்கும். ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமாகும்.
பொதுவாக 2 வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நட்ஸ் ஆகும். அதிலுள்ள நார்சத்து இதயத்தை வலுவாக்கும். எலும்புகள் வலுவாகும்.
நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நீண்ட ஆயுளை தரும். பாதாமை பாலாக விட அப்படியே கொடுப்பது சிறந்தது. இரவில் ஊற வைத்து மறு நாள் தினமும் இரு பாதாமை சாப்பிட சொல்லுங்கள். புத்திக் கூர்மை, ஆயுள் ஆரோக்கியம் மேம்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X