என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
Byமாலை மலர்18 Sep 2018 4:44 AM GMT (Updated: 18 Sep 2018 4:44 AM GMT)
கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் திருமஞ்சனம், மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப்பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது.
நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை ஹோமம், திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.
விழாவில், தினசரி யாகசாலை பூஜையும், இரவு சாமி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திர வரதராஜபெருமாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புரட்டாசி திருவோண கருட சேவையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது. 22-ந்தேதி (சனிக்கிழமை) புஷ்ப யாகம், பூர்ணாகுதி உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலை ஹோமமும், மாலை 6 மணிக்கு 108 கலசாபிஷேகம், ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை ஹோமம், திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.
விழாவில், தினசரி யாகசாலை பூஜையும், இரவு சாமி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திர வரதராஜபெருமாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புரட்டாசி திருவோண கருட சேவையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது. 22-ந்தேதி (சனிக்கிழமை) புஷ்ப யாகம், பூர்ணாகுதி உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலை ஹோமமும், மாலை 6 மணிக்கு 108 கலசாபிஷேகம், ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X