என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா தொடங்கியது
Byமாலை மலர்23 Aug 2018 5:01 AM GMT (Updated: 23 Aug 2018 5:01 AM GMT)
பழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்படத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
அதன் பின்னர் அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. அதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றி வைக்கப்பட்டு திருவிழா தொடங்கியது. விழாவில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் கோவில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
11 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் 7-ம் நாளான வருகிற 28-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாளான 30-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரேற்ற நிகழ்ச்சியும், 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆவணி பிரம்மோற்சவ விழாவையொட்டி தினசரி காலை 7 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதே போல் நாள்தோறும் இரவு 7 மணிக்கு பவளக்கால் சப்பரம், அனுமார், சிம்மம், கருடன், அன்னம், குதிரை, சேஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடாகி திருஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் விழா நடைபெறும் 11 நாட்களும் மாலை 6.30 மணிக்கு மேல் கோவில் முன் மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதன் பின்னர் அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. அதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றி வைக்கப்பட்டு திருவிழா தொடங்கியது. விழாவில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் கோவில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
11 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் 7-ம் நாளான வருகிற 28-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாளான 30-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரேற்ற நிகழ்ச்சியும், 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆவணி பிரம்மோற்சவ விழாவையொட்டி தினசரி காலை 7 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதே போல் நாள்தோறும் இரவு 7 மணிக்கு பவளக்கால் சப்பரம், அனுமார், சிம்மம், கருடன், அன்னம், குதிரை, சேஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடாகி திருஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் விழா நடைபெறும் 11 நாட்களும் மாலை 6.30 மணிக்கு மேல் கோவில் முன் மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X