என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி
Byமாலை மலர்21 May 2018 5:38 AM GMT (Updated: 21 May 2018 5:38 AM GMT)
வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி புறப்பட்டு சென்றது.
வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் வேல்காவடி செல்லும் விழா கடந்த 18-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முதல்நாள் காலை கணபதிஹோமம், மாலை திருவிளக்கு பூஜை, தீபாராதனை, நலத்திட்ட உதவி வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடந்தது. 19-ந்தேதி காலை தீபாராதனை, மாலை நையாண்டிமேளம், வேல்தரித்தல், இரவு 8 மணிக்கு பூக்குழி இறங்குதல், அன்னதானம், காவடி பெரும் பூஜை ஆகியவை நடைபெற்றது.
நேற்று காலை 7.30 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அங்கு தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் பிள்ளையார் கோவில் வந்தடைந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு நாசிடோல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, 4 மணிக்கு பறக்கும் வேல்காவடி பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
நேற்று காலை 7.30 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அங்கு தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் பிள்ளையார் கோவில் வந்தடைந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு நாசிடோல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, 4 மணிக்கு பறக்கும் வேல்காவடி பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X