search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரசிம்மபெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு புதிதாக தங்ககவசம் அணிவிப்பு
    X

    நரசிம்மபெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு புதிதாக தங்ககவசம் அணிவிப்பு

    மூக்கரை நரசிம்மபெருமாள் கோவில் வளாகத்தில் 16 அடி உயர ஆஞ்சநேயருக்கு புதிதாக தங்ககவசம் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    எடப்பாடியில் ஜலகண்டாபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற மூக்கரை நரசிம்மபெருமாள் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் 16 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு முத்துமணி பவளத்தால் முத்தங்கி செய்யப்பட்டு விழா காலங்களில் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

    தற்போது ஆஞ்சநேயர் சேவா குழு சார்பில் புதிதாக தங்ககவசம் செய்யப்பட்டு முன்னாள் நகரசபை தலைவர் கதிரேசன் தலைமையில், துணைத்தலைவர் ராமன், திருப்பணி கமிட்டி தலைவர் தர்மலிங்கம் முன்னிலையில் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லட்சார்ச்சனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் சேவா குழு நிர்வாகிகள் மாதையன், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், மதிவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×