என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சேத்தியாத்தோப்பு அருகே மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்24 March 2017 5:45 AM GMT (Updated: 24 March 2017 5:45 AM GMT)
சேத்தியாத்தோப்பு அருகே மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூரில் மதுரைவீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம், புண்யாகவாசனம், முதல் காலயாகசாலை பூஜை, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளாள நேற்று காலை கோ பூஜை, கஜபூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம்புறப்பாடு நடைபெற்றது.
இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மதுரைவீரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து கணபதி ஹோமம், புண்யாகவாசனம், முதல் காலயாகசாலை பூஜை, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளாள நேற்று காலை கோ பூஜை, கஜபூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம்புறப்பாடு நடைபெற்றது.
இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மதுரைவீரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X