என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நீலகேசி அம்மன் கோவிலில் 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
Byமாலை மலர்22 March 2017 3:31 AM GMT (Updated: 22 March 2017 3:31 AM GMT)
குமரி மாவட்டம் குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
குமரி மாவட்டம் குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று தூக்க நேர்ச்சை நடந்தது. இதையொட்டி நேற்று திருப்பள்ளி உணர்த்தல், பூஜை, அம்மன் எழுந்தருளல், அன்னதானம் போன்றவை நடந்தன.
பின்னர் நேர்ச்சை விரதம் மேற்கொண்டவர்கள் பனங்கோடு வீட்டில் இருந்து விழா நடைபெறும் பறம்பு நோக்கி சென்று அம்மனை வணங்கினர்.
பிறகு குற்றியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள்குடம், துலாபாரம், பிடிபணம் வாருதல், உருளு நேர்ச்சை ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, தூக்க நேர்ச்சை நடந்தது. முதலில் அம்மன் தூக்கம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடந்தது. இரவு சமய சொற்பொழிவு, பரிசு வழங்குதல், சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவின் 9-வது நாளான நாளை (வியாழக்கிழமை) கமுகு பிடுங்குதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி பொங்கல் விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
பின்னர் நேர்ச்சை விரதம் மேற்கொண்டவர்கள் பனங்கோடு வீட்டில் இருந்து விழா நடைபெறும் பறம்பு நோக்கி சென்று அம்மனை வணங்கினர்.
பிறகு குற்றியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள்குடம், துலாபாரம், பிடிபணம் வாருதல், உருளு நேர்ச்சை ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, தூக்க நேர்ச்சை நடந்தது. முதலில் அம்மன் தூக்கம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடந்தது. இரவு சமய சொற்பொழிவு, பரிசு வழங்குதல், சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவின் 9-வது நாளான நாளை (வியாழக்கிழமை) கமுகு பிடுங்குதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி பொங்கல் விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X