என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்1 March 2017 8:20 AM GMT (Updated: 1 March 2017 8:20 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாள் திருவிழாவான நேற்று ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வாகன மண்டபம் சென்றடைந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. இத்திருவிழா வருகிற 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு ரெங்க விலாஸ் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முதல் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வாகன மண்டபம் சென்றடைந்தார். பின்னர் 8.30 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இன்று(புதன்கிழமை) ஹனுமந்த வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) கற்பகவிருட்ச வாகனத்திலும், 3-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 4-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 5-ந் தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருகிறார். விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 7-ந் தேதி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 8-ந் தேதி பந்த காட்சி நடைபெறும். அன்றைய தினம் காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
முதல் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வாகன மண்டபம் சென்றடைந்தார். பின்னர் 8.30 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இன்று(புதன்கிழமை) ஹனுமந்த வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) கற்பகவிருட்ச வாகனத்திலும், 3-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 4-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 5-ந் தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வருகிறார். விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 7-ந் தேதி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 8-ந் தேதி பந்த காட்சி நடைபெறும். அன்றைய தினம் காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X