search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கைலாசநாத சாமி கோவிலில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி
    X

    கைலாசநாத சாமி கோவிலில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி

    காரைக்காலில் உள்ள கைலாசநாத சாமி கோவிலில் சுந்தராம்பிகைக்கு லட்சார்ச்சனை மற்றும் தசாம்ஸ ஹோமம் நடைபெற்றது.
    காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாத சாமி கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுந்தராம்பிகைக்கு லட்சார்ச்சனை மற்றும் தசாம்ஸ ஹோமம் நடைபெற்றது. அதனையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தசாம்ஸ ஹோமம் நடைபெற்றது.

    இதன் நிறைவாக புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு அம்பாள் சன்னதிக்கு சென்றனர். பின்னர் அந்த புனித நீரைக்கொண்டு அம்பாளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×