என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரணி கோவிலில் நவராத்திரி விழா: 20 லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
Byமாலை மலர்1 Oct 2016 9:45 AM GMT (Updated: 1 Oct 2016 9:45 AM GMT)
ஆரணி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 20 லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆரணி சைதாப்பேட்டை யில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள நரசிம்ம பெருமாளுக்கு நவராத்திரி விழா நடந்தது.
இதையொட்டி மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் நரசிம்ம பெருமாள் எழுந்தருளி செண்டை மேளம், இன்னிசை வாத்தியங்கள் முழுங்க வீதி உலா வந்தார்.
காலம் காலமாக நடைபெறும் முறைப்படி பக்தரின் வீட்டிலிருந்து நரசிம்மர் சிரசு உருவத்தை கொண்டு வந்து புஷ்ப பல்லக்கில் அமர்த்தினர். பின்னர் சைதாப்பேட்டை, நாடகபேட்டை சாலை, கார்த்திகேயன் சாலை, மேட்டுத்தெரு ஆகிய முக்கிய வீதிகளில் புஷ்ப பல்லக்கு வீதி உலா வந்தது.
திருமணமாத பெண்கள் மற்றும் குழந்தை வரம் இல்லாத தம்பதியினர் வேண்டுதல் நிறைவேறியதையடுத்தும், மகாளய அமாவாசையை யொட்டியும் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X