search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தான விருத்தி தரும் விரத வழிபாடு
    X

    சந்தான விருத்தி தரும் விரத வழிபாடு

    ஆடி மாதத்தில் சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபாடு செய்தால் வாரிசு உருவாகும்.
    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும். அந்த மாதத்தில் சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆடிப்பூரம் 13.8.2018 (திங்கட்கிழமை) அன்று வருகிறது.

    அன்று திருக்கோவில்கள் தோறும் உற்சவம் நடைபெறும். மனித தெய்வ வழிபாடுகளும் செட்டிநாட்டு பகுதிகளில் நகரத்தார்கள் படைப்புகள் என்று கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சை பயிறை தண்ணீரில் நனைய வைப்பர். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு நம்பிக்கையோடு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு உருவாகும்.
    Next Story
    ×