என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தீராத வினைகளை தீர்த்து வைக்கும் இருக்கன்குடி மாரியம்மன்
Byமாலை மலர்17 Sep 2016 4:46 AM GMT (Updated: 17 Sep 2016 4:46 AM GMT)
இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய், தீராத வயிற்று வலி, அம்மை நோய்கள் தீரும்.
இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி அமைப்பிருக்கும். ஆனால் இருக்கன்குடி மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது என்ப தற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கின்றார்.
இந்த அமைப்பு இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பு அம்சமாகும். இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய், தீராத வயிற்று வலி, அம்மை நோய்கள் தீரும். கோரிக்கைகள் நிறைவேறியதும், நோய் தீர்ந்தவுடனும் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களின் தரிசன வசதிக் காக காலை நடை திறப்பு முதல் இரவு பூஜை முடியும் வரை தொடர்ந்து சன்னதி நடைதிறந்து இருக்கும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X