search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையை தொடர்ந்து பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் கொடி ஏற்றுகிறார். பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட செயலாளர் நார்பட் தாமஸ் மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    வருகிற திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கும், காலை 6.30 மணிக்கும் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    வருகிற 11 - ந் தேதி மாலை 6.30 மணிக்கு வடக்கன்குளம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. நிகழ்ச்சியில், அருட்பணியாளர் ஜோசப் இசிதோர் மறையுரை ஆற்றுகிறார்.

    12-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிருபாகரன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 9.30 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

    13 -ந் தேதி அதிகாலை 5 மணிக்கு செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறும். காலை 7 மணிக்கு அழகப்பபுரம் குருக்கள் கலந்து கொள்ளும் திருப்பலியும், மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், இரவு 7.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடக்கிறது

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன், அருட்பணியாளர் சூசை மணி, பங்குப்பேரவை துணைத்தலைவர் சேவியர் மணி, செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்லத்துரை, இணைச்செயலாளர் கீவன் மேரி மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×