என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்31 Jan 2018 3:30 AM GMT (Updated: 31 Jan 2018 3:30 AM GMT)
கருத்தபிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கடையம் அருகே உள்ள பாளை மறை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கருத்தபிள்ளையூர் கருணை வீரன் புனித அந்தோணியார் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கடந்த 18-ம் தேதி சேர்த் தோட்டம் கெபியிலிருந்து திருக்கொடி பவனி வந்து மாலை 6.30 மணிக்கு பாதிரியார் ஜோசப் கென்னடி தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. அடுத்த 2 நாட்கள் விவிலிய போட்டி நடந்தது. 21-ம் தேதி காலையில் விளையாட்டு போட்டியும், மாலையில் பொன் விழா தம்பதியருக்கு பாராட்டு விழாவும், மறை கல்வி மாணவ மாணவிகளின் வகுப்பு வாரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
22-ம் தேதி குடும்பங்கள் ஒன்றிப்பு விழா, அன்பிய ஒருங்கிணைப்பு மற்றும் மண்டலங்களின் சார்பில் கலை விழா நடந்தது. 23-ம் தேதி இறை மக்களின் பட்டிமன்றம் நடந்தது. 24- ம் தேதி ஆர்.சி. தொடக்க பள்ளியின் கலை நிகழ்ச்சி நடந்தது. 25- ம் தேதி சிறப்பு பட்டிமன்றமும், 27-ம் தேதி புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 28-ம் தேதி புது நன்மை விழா, திருமுழுக்கு விழா, நற்கருணை பவனி நடந்தது.
கடந்த 29-ம் ம்தேதி சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்தும், அதை தொடர்ந்து வான வேடிக்கையுடன் புனித அந்தோணியாரின் திருவுருவ தேர் பவனியும் நடந்தது. இதில் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்று திருப்பலி, நன்றி திருப்பலி, கொடியிறக்கம் மற்றும் இளையோர் கலை நிகழ்ச்சி நடந்தது. நவ நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருவிழா திருயாத்திரை குழுவினரின் சிறப்பு ஜெப வழிபாடும், மாலை 6.30 மணிக்கு நவ நாள் ஜெபம், திருப்பலி மறையுரை, நற்கருணை, ஆராதனை ஆகியன நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அந்தோணி வியாகப்பன், திருவிழா குழுவினர் மற்றும் அன்பிய இறை மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X