என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்20 Sep 2018 3:08 AM GMT (Updated: 20 Sep 2018 3:08 AM GMT)
நாகர்கோவில், மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. விழாவில் ஓய்வு பெற்ற கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.
22-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் எம்மானுவேல் ராஜ் தலைமையில் திருப்பலியும், 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி போன்றவையும் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருக்குடும்ப நவநாள், திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, மறையுரையும், இரவு 8.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மார்க்கோனி ரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்துள்ளனர்.
நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. விழாவில் ஓய்வு பெற்ற கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.
22-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் எம்மானுவேல் ராஜ் தலைமையில் திருப்பலியும், 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி போன்றவையும் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருக்குடும்ப நவநாள், திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, மறையுரையும், இரவு 8.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மார்க்கோனி ரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X