search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சகாயமாதா ஆலய தேர் பவனி
    X

    சகாயமாதா ஆலய தேர் பவனி

    சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலய திருவிழா கடந்த 14-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சிலுவை இல்ல அருட்தந்தையர்கள் கொடியேற்றி வைத்தனர்.

    கடந்த 15-ந் தேதி மாலை நவநாள் திருப்பலியும், அதனை தொடர்ந்து மேலப்புதூர் மரியானூஸ் ஐசக்கின் பல்சமய உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எட்டரையில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    பின்னர் மேலப்புதூர் ஆயர் இல்ல செயலாளர் செபாஸ்டின், திருவிழா கூட்டுத் திருப்பலி நடத்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தை எட்வர்ட் ராஜா செய்திருந்தார். 
    Next Story
    ×