என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புளியங்குடி உலக மீட்பர் ஆலயத்திருவிழா
Byமாலை மலர்2 July 2018 3:24 AM GMT (Updated: 2 July 2018 3:24 AM GMT)
புளியங்குடி கத்தோலிக்க திருச்சபை உலகமீட்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று இரவு சப்பர பவனி நடைபெற்றது.
புளியங்குடி கத்தோலிக்க திருச்சபை உலகமீட்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகள் வரவேற்றார். சிதம்பராபுரம் பங்குத்தந்தை பீற்றர் அடிகள் கொடியேற்றி, திருப்பலி நிறைவேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தினமும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்று வந்தது. 8-ம் திருநாளில் சிவகிரி பங்குத்தந்தை சேவியர் அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து நற்கருணைப்பவனி நடைபெற்றது. 9-ம் திருநாளில் மேலஇலந்தைகுளம் பங்குத்தந்தை ஜீவா அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் அடிகள் திருப்பலி நிறைவேற்றி, சிறப்பு மறையுரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து அசனம் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருள்மரியநாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ராசையா, செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பொருளாளர் அருள்ஜோசப்ராஜ், பங்குப்பேரவை நிர்வாகிகள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
தினமும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்று வந்தது. 8-ம் திருநாளில் சிவகிரி பங்குத்தந்தை சேவியர் அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து நற்கருணைப்பவனி நடைபெற்றது. 9-ம் திருநாளில் மேலஇலந்தைகுளம் பங்குத்தந்தை ஜீவா அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் அடிகள் திருப்பலி நிறைவேற்றி, சிறப்பு மறையுரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து அசனம் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருள்மரியநாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ராசையா, செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பொருளாளர் அருள்ஜோசப்ராஜ், பங்குப்பேரவை நிர்வாகிகள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X