என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஜாக்சன் துரை
Byமாலை மலர்6 Jun 2016 1:25 PM GMT (Updated: 6 Jun 2016 1:25 PM GMT)
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் ‘ஜாக்சன்துரை’. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ராஜேந்திரன், ஹாலிவுட் நடிகர் ஷாஜரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் ‘ஜாக்சன்துரை’. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ராஜேந்திரன், ஹாலிவுட் நடிகர் ஷாஜரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு- விவேக் ஹர்சன். தயாரிப்பு- எம்.எஸ்.சரவணன், எழுத்து, இயக்கம்- தரணிதரன்.
போலீஸ் அதிகாரி சிபிராஜ். ஒரு கிராமத்தின் பிரச்சினையை தீர்க்க இவரை அனுப்பி வைக்கிறார்கள். அங்கே சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இருந்து அந்த கிராமத்தை சிபிராஜ் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
சத்யராஜ் முதல் முறையாக இந்த படத்தில் பேய் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் தரணிதரனிடம் கேட்ட போது....
“1940-ல் சுதந்திர போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் படம் முழுவதையும் கலகலப்பாக ரசிக்கும் வகையில் காமெடி கலந்த திகில் கதையாக கொடுத்திருக்கிறோம். நவீன தொழில் நுட்பத்துடன் ‘ஜாக்சன்துரை’ படமாகி இருக்கிறது. சத்யராஜின் வித்தியாசமான நடிப்பை இதில் காணலாம். இது நிச்சயம் அனைவரையும் கவரும். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.
சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு- விவேக் ஹர்சன். தயாரிப்பு- எம்.எஸ்.சரவணன், எழுத்து, இயக்கம்- தரணிதரன்.
போலீஸ் அதிகாரி சிபிராஜ். ஒரு கிராமத்தின் பிரச்சினையை தீர்க்க இவரை அனுப்பி வைக்கிறார்கள். அங்கே சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இருந்து அந்த கிராமத்தை சிபிராஜ் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
சத்யராஜ் முதல் முறையாக இந்த படத்தில் பேய் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் தரணிதரனிடம் கேட்ட போது....
“1940-ல் சுதந்திர போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் படம் முழுவதையும் கலகலப்பாக ரசிக்கும் வகையில் காமெடி கலந்த திகில் கதையாக கொடுத்திருக்கிறோம். நவீன தொழில் நுட்பத்துடன் ‘ஜாக்சன்துரை’ படமாகி இருக்கிறது. சத்யராஜின் வித்தியாசமான நடிப்பை இதில் காணலாம். இது நிச்சயம் அனைவரையும் கவரும். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X