என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வித்தையடி நானுனக்கு
Byமாலை மலர்27 May 2016 4:40 PM GMT (Updated: 27 May 2016 4:41 PM GMT)
ராமநாதன் கே.பி. இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.
ராமநாதன் கே.பி. இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.
இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா...’ பாடல் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர் இப்போது ‘ராமநாதன் கே.பி. என பெயரை மாற்றி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் இவரும் ஒருவர். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார். லோகநாதன் டி, ஐஎஸ்ஆர் செல்வகுமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் தொடங்கும் பாடல் தான் இடம் பெற்றுள்ளது. இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்ட மைத்துள்ளார் விவேக் நாராயண். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனரிடம் கேட்ட போது...
ஒரு நவீன திரில்லர். நாம் ரசித்துக் குடிக்கும் காபி, அக்கினி கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.
தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேர் எதிர் துருவங்கள். அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு” என்றார்.
இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா...’ பாடல் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர் இப்போது ‘ராமநாதன் கே.பி. என பெயரை மாற்றி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் இவரும் ஒருவர். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார். லோகநாதன் டி, ஐஎஸ்ஆர் செல்வகுமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் தொடங்கும் பாடல் தான் இடம் பெற்றுள்ளது. இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்ட மைத்துள்ளார் விவேக் நாராயண். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனரிடம் கேட்ட போது...
ஒரு நவீன திரில்லர். நாம் ரசித்துக் குடிக்கும் காபி, அக்கினி கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.
தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேர் எதிர் துருவங்கள். அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X